செய்திகள்

தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா

தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீசுக்கான ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்குமுன்பு டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 8 பேரும் அந்த டிரைவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 33 வயது மருத்துவ பணியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியது நினைவுகூரத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு