செய்திகள்

பிளே-ஆப் சுற்று முனைப்பில் பெங்களூரு

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

தினத்தந்தி

கடந்த இரு ஆட்டங்களில் மும்பை, ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்ததால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ள பெங்களூரு அணியில் கேப்டன் கோலி, தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், கே.எஸ்.பரத் நல்ல பார்மில் இருப்பதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை கடைசி ஓவரில் தோற்கடித்ததால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 7 தோல்வி) உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டிலும் ஆரோக்கியமான நிலையை எட்ட வேண்டியது முக்கியம். ஒன்றில் தோற்றாலும் வெளியேற்றம் தான். ஏற்கனவே பெங்களூருவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கும் பஞ்சாப் அணி மீண்டும் அசத்த வேண்டும் என்றால் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ராம் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் எடுத்து விட்டாலே சவாலாக இருக்கும்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு