மாவட்ட செய்திகள்

போலி விசா மூலம் துபாய் செல்ல முயன்ற 11 பேர் கைது

போலி விசா மூலம் துபாய் செல்ல முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் துபாய் செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய சையத் சமீனா அலி (வயது24) என்பவருடன் 10 பேர் வந்திருந்தனர். அப்போது குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சையத் சமீனா அலி வைத்திருந்த விசா போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சையத் சமீனா அலியுடன் வந்த மற்ற 10 பேரின் விசாக்களையும் சோதனை போட்டனர். இதில் அவர்கள் அனைவரும் போலி விசா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவர்களை பிடித்து சாகர் போலீசில் ஒப்படைத்தனர். சையத் சமீனா அலி உள்பட 11 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதில், கைதான மற்றவர்களின் பெயர் பிலிப் முகமது மஜித் (29), சபீர் ஜமீல் (29), சேக் பேகம் முன்னா (48), சபீஸ் அகமது (21), பிரவின் சேக் (48), அன்சாரி அகமது (19), சோட்டா ஹனீப் (19), முகமது காலித் (40), அக்பர் (40), சேக் முகமது என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 55 வங்கி கடன் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு