மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 22 யூனிட் மணல் பறிமுதல்

கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 22 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொரால்பாக்கம் கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப்படுகை உள்ளது. இதில் இருந்து 22 யூனிட் மணல் கடத்தி வந்து கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து இருப்பதாக போளூர் தாசில்தார் ஜெயபாலுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர் நேரில் சென்று பதுக்கி வைத்து இருந்த மணலை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு, ரபியுல்லா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் 22 பயனாளிகளுக்கு 1 யூனிட் வீதம் 22 யூனிட் மணல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பிரித்து கொடுக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு