மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 290 பேர் தங்க வைப்பு

தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 290 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு,

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தங்கி இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் வரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 15 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் வரை ஈரோட்டில் 33 பேர், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியில் 20 பேர், பெருந்துறை மற்றும் சென்னிமலையில் 54 பேர், பவானியில் 16 பேர், கோபியில் 29 பேர், நம்பியூரில் ஒருவர், டி.என்.பாளையத்தில் 21 பேர், சத்தியமங்கலத்தில் 35 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 290 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதில் 87 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு