மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஏமப்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 12 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த செந்தில்குமார்(வயது 36), பெரியசாமி(34) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் 4 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த திலீப்கிருஷ்ணன்(40), பெரியசாமி(39) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை