மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் 7 ஆண்டுகளில் ரூ.85 கோடி திருமண நிதிஉதவி - கலெக்டர் லதா தகவல்

மாவட்டத்தில் கடந்த 2011-2012-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளில் ரூ.85 கோடி திருமண நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம் மூலமாக சமுதாயத்திலே ஏழை பெண்களிடையே கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்திலும், இளம் வயது திருமணத்தை தவிர்த்திடவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும், 12-ம் வகுப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கும் திருமண நிதிஉதவியாக அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த பெண்ணின் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரமும், உடன் 8 கிராம் தங்கம் தாலி செய்வதற்கு அப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் ரூ.85 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2011-12-ம் நிதியாண்டில் திருமண உதவித்திட்டங்களின்கீழ் 2 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கத்துடன் கூடிய நிதியுதவி ரூ.8 கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2012-13-ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 159 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரம் நிதிஉதவியும், 2013-14-ம் நிதியாண்டில் 3 ஆயிரத்து 219 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2014-15-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 902 பயனாளிகளுக்கு நிதிஉதவி ரூ.10 கோடியே 65 லட்சம் நிதிஉதவியும், 2015-16-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2016-17-ம் நிதியாண்டில் 3 ஆயிரத்து 59 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவியும், 2017-18-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 247 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு