மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

தண்டராம்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுலகத்துக்கு வந்து, கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தண்டராம்பட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

அதில் விவசாயிகள் நெல் மட்டும் கொள்முதல் செய்யும் முறை உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து கொண்டு பல்வேறு வகையில் முறைகேடு மற்றும் ஊழல் நடக்கிறது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தரிவித்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு