மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் குறை கூறியது துரதிர்ஷ்டம் குமாரசாமி அறிக்கை

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் குறை கூறியது, துரதிர்ஷ்டவசமானது என்று குமாரசாமி கூறி இருக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது ஒரு கொடூரமான நகைச்சுவை என்றும் அவர் விமர்சித்தார். பிரதமருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விவசாயிகளின் நலனை பாதுகாக்க எங்கள் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்