மாவட்ட செய்திகள்

சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடி மாயம்

சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரூ.1 கோடி மாயமானது. இதுதொடர்பாக தனியார் நிறுவன பணியாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக மதுரையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய வேனில் சென்றனர். அதில் 2 பாதுகாவலர்கள், டிரைவர், பொறுப்பாளர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பிவிட்டு 5-வதாக மற்றொரு ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக முதுகுளத்தூர் சென்றனர். அந்த வேனின் லாக்கரில் ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்தது. கடலாடி அருகே உள்ள மலட்டாறு முக்குரோட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் சென்றபோது, பணம் ஏற்றி சென்ற வாகனம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

வாகனம் விபத்தில் சிக்கியது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். மேலும் சாயல்குடி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது வேனில் கொண்டு வந்த லாக்கரில் ரூ.20 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 கோடி மாயமானது தெரியவந்தது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு