வாலிபரை தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய 2 கொள்ளையர்கள்
வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய கொள்ளையர்கள் 2 பேர் சட்டையில் இருந்த ரத்த கறையால் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
மும்பை,
மும்பை தகிசர், அம்பாவாடி சுதிர் பட்கே பாலத்தில் சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, போலீசாரின் சிக்னலை மீறி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் அந்த ஆட்டோவை துரத்தி பிடித்தனர்.