அடையாறு,
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் எலீசா (வயது 25). சென்னைக்கு சுற்றுலா வந்த அவர், மெரினா கடற்கரை சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் அமர்ந்து நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி எலீசாவிடம் இருந்த 2 கேமரா மற்றும் கைப்பையை பறித்துச்சென்று விட்டார்.