மாவட்ட செய்திகள்

தேவர்சோலையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தேவர்சோலையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கூடலூர்

கூடலூர் அருகே தேவர்சோலை, பாடந்தொரை பஜாரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என பேரூராட்சி செயல் அதிகாரி நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு தின்பண்டங்கள் பொதிந்து வைத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது செயல் அதிகாரி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதேபோல் ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது சிலர் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடந்து செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப் பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்