மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி: தலைமறைவான தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேருக்கு வலைவீச்சு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய டயர் உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பழைய டயர்களை உருக்கும் தொழிற்சாலை உள்ளது. கடந்த 1-ந்தேதி இங்குள்ள பாய்லர் ஒன்று வெடித்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்களான ஜிஜேந்திரா (வயது 32), குந்தன் ஓசாரி (21), விதூர் (20) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் 2 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு