மாவட்ட செய்திகள்

சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்

சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாவேந்தர் தெரு, பாரதிதாசன் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு போன்ற பகுதிகளில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட ரூ.6 லட்சம் நிதி எங்கே? என கேள்வி கேட்டும், நிதி ஒதுக்கி 6 மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்தும் அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாய், தலையணையுடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்