மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 39). இவர் கடந்த 15-ந் தேதி குடும்பத்துடன், தனது சொந்த ஊரான கொம்பாடி தளவாய்புரத்தில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரங்கள், வெள்ளி கொலுசு, ரூ.22 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜரத்தினம் நேற்று சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது