மாவட்ட செய்திகள்

கே.வி.குப்பம் அருகே சூறாவளி காற்றில் வீடுகள் மீது விழுந்த செல்போன் கோபுரம்

கே.வி.குப்பம் அருகே வீசிய சூறைக்காற்றால் செல்போன் கோபுரம் சாய்ந்து வீடுகள் மீது விழுந்தது.

தினத்தந்தி

கே.வி.குப்பம்,

கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் செல்லும் ரோட்டில் மின்சார அலுவலகத்தின் அருகில் சண்முகம் என்பவரின் காலி மனையில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்தப்பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இதில் செல்போன் கோபுரம் திடீரென சாய்ந்து அருகில் இருந்த கோபி, சந்திரன் ஆகியோர் வீட்டு கூரைகள் மீது விழுந்தது. இதில் அருகில் இருந்த சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டி ஆகியவை உடைந்தன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும், தொழில்நுட்ப ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கேவி குப்பம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது