மாவட்ட செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போனை பறித்து கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 26). டிரைவர். இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே சாலை ஓரமாக நடத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு