மாவட்ட செய்திகள்

சென்னை, 7-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி

சென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரத்தை பொருத்தும்போது தவறி விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலியானார்.

தினத்தந்தி

அடையாறு,

சென்னையை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 29). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 9 மாத குழந்தையும் உள்ளது.

ராஜசேகரன், நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக ஜன்னலுக்கு வெளிப்புறம் நின்று கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாக கால் தவறி 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகரன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை