உசிலம்பட்டி, மார்ச்
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி சீர்மரபினர் உள்ளிட்ட 68 சமுதாய மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கோரி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.