மாவட்ட செய்திகள்

யோகா போட்டியில் சாதனை படைத்த கரூர் மாணவிக்கு பாராட்டு

உலக யோகா தினத்தையொட்டி தேசிய யோகா ஒலிம்பியாட் (என்.ஒய்.ஓ) சார்பில் டெல்லியில் யோகா போட்டிகள் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது.

தினத்தந்தி

குளித்தலை,

உலக யோகா தினத்தையொட்டி தேசிய யோகா ஒலிம்பியாட் (என்.ஒய்.ஓ) சார்பில் டெல்லியில் யோகா போட்டிகள் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இதில் 14 வயதுகுட்பட்டோர் பிரிவில், குழு யோகாவில் காஞ்சிபுரம், விருதுநகர், கரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 4 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் மாவட்டம் சார்பில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி அபர்னாஸ்ரீயும் பங்கேற்றார். இந்த குழு யோகாவில் மாணவி அபர்னாஸ்ரீ உள்ளிட்ட 4 மாணவிகள் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று தனது பள்ளிக்கு வந்த அபர்னாஸ்ரீயை, பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் பாராட்டி வரவேற்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது