மாவட்ட செய்திகள்

தேனியில் நிலுவை தொகை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

தேனியில் நிலுவை தொகையை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் வழங்கியதில் ஒப்பந்ததாரர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பணம் நிலுவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாத காரணத்தால், ஒப்பந்ததாரர்கள் இன்று உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு