மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமை திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த அனைவரும் முககவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அவருடன் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிபாபு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பில்லா என்கிற சதீஷ்குமார், வார்டு உறுப்பினர் பைரவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் சுகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்