மாவட்ட செய்திகள்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி நாட்களை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். இதில் தேசிய ஊரக வேலை திட்ட பணி நாட்களை ஆண்டுக்கு 100-ல் இருந்து 200 நாட்களாகவும், தினசரி கூலியை ரூ.400-ஆகவும் உயர்த்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையுடன் கூலி வழஙக வேண்டும்.

நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு