அரியலூர்,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே, அருகில் உள்ள விவசாய பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.