பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விடுபட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், நில பட்டா வழங்க வேண்டும், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய சங்க தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பாபு, வாசு, யோகண்ணன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று அய்யன்கொல்லியில் பகுதி செயலாளர் அச்சுதன் தலைமையில் நடந்த போராட்டத்தில் நிர்வாகி ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.