மாவட்ட செய்திகள்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடக்கிறது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை சப்பரம் வாகனத்தில் பார்வதி அம்மன் உடன் ஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளி அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் சாமி வீதி உலா நடக்கிறது.

நாளை(வெள்ளிக்கிழமை) காலை அதிகார நந்தி சேவை, திருமுலைப்பால் உற்சவம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், மாலை பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 7-ந் தேதி காலை அன்ன வாகனம், மாலை நாக வாகனம், 8-ந் தேதி காலை யாளி வாகனம், இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9-ந்தேதி காலை சிம்ம வாகனம், மாலை யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு தேர் திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு