மாவட்ட செய்திகள்

இலவச துணிக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது - அமைச்சர் கந்தசாமி தகவல்

இலவச துணிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.500-ம், சிவப்பு நிற ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஒவ்வொரு கார்டுக்கும் தலா ரூ.900-ம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து இலவச துணிக்கான பணம் நேற்று பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின்பேரில் முதல்-அமைச்சர் மற்றும் கவர்னரின் ஒப்புதலின்பேரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலமாக சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச துணிக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.900 மற்றும் தனிநபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.450-ம் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் நபர் ஒன்றுக்கு தலா ரூ.500 குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு பொருட்களுக்கு ஈடான ரூ.170-ம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது