மாவட்ட செய்திகள்

வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் மழை வீட்டின்மீது மரம் விழுந்ததில் 4 பேர் காயம்

வேப்பனப்பள்ளியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டுக்குள் மரம் விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில் சிந்தகும்மனப்பள்ளி கிராமத்தில் வேப்பமரம் ஒன்று சூறைக்காற்றால் சாய்ந்து சந்திரன் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததில் வீட்டில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பயிர்கள் சேதம்

இதேபோல் அதே கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் மேல் மரம் விழுந்ததில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் சில இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை பெய்ததில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் வாழை, தக்காளி போன்ற விளைநிலங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு