மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தினத்தந்தி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமை தாங்கி 624 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணி, நகர துணை செயலாளர் ராணி, நகர பொருளாளர் ஷபி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர் அன்பரசன், நகர பாசறை செயலாளர் பாலு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்