ஜோலார்பேட்டை,
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்காக முதற்கட்டமாக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.