மாவட்ட செய்திகள்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி ஊர்வலம்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டு சென்றது.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி, மணக்காட்டுவிளையில் பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்ப காவடி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் காலையில் தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு காவடி பூஜை, 7.30 மணிக்கு வேல் தரித்தல், 9 மணிக்கு தீபாராதனை போன்றவை நடந்தன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு காவடி கட்டுதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு காவடி பவனி, பகல் 11 மணிக்கு சமபந்தி விருந்து போன்றவை நடந்தது.

திருச்செந்தூருக்கு ஊர்வலம்

மாலை 3 மணிக்கு பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பகாவடிகள் ஊர்வலம் மணக்காட்டுவிளையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலம் பரப்பற்று, படர்நிலம், மண்டைக்காடு, கூட்டுமங்கலம், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு