நாமக்கல்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு தெரிவித்து இருந்தன.
இதனால் நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை. எனவே பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.