செம்பட்டு, ஜன.13-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்ற பயணி ஸ்பேனரில் மறைத்து ரூ.4.60 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.