செம்பட்டு,ஜன.9-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ கருப்பன் (வயது 59) என்பவர் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.