மாவட்ட செய்திகள்

கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள்

கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள் பரவலாக காணப்படுகிறது.

கூடலூர்,

பல்லுயிர் வளம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலையில் 5 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்களும், 139 பாலூட்டிகளும், 508 வகையான பறவைகளும் உள்ளன. இதுதவிர அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்களும் உள்ளன. 1,232 தாவரங்கள் நீலகிரியில் காணப்படுகிறது.

டொசீரா, பெல்டேட்டா என பெயர்கள் கொண்ட தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் தன்மை உடையவை. இந்த தாவரங்கள் இமயமலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காணப்படுகிறது. டொசிரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த தாவரத்தில் டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா என பிரிவுகள் உள்ளன. இந்த வகை தாவரங்கள் கூடலூர், தேவாலா, நடுவட்டம் பகுதியில் பரவலாக காணப் படுகிறது.

டிசம்பர் முதல் மே மாதம் வரை கடும் பனிப்பொழிவு மற்றும் கோடை காலம் என்பதால் பசுமை இழந்து காணப்படும் வனப்பகுதிக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் பல நூறு ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள், அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்கள் ஆண்டுதோறும் தீயில் கருகி விடுகின்றன. இதனால் பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்களும் அழிவின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இது குறித்து தாவர ஆய்வாளர் சுந்தரேசன் கூறியதாவது:-

நீலகிரி உயிர் சூழலில் அரிய வகை தாவரங்கள் உள்ளன. டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா தாவரங்கள் பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது. கூடலூர் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த வகை தாவரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற தாவரங்களை பாதுகாக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் தாவரவியல் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு