மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கத்திமுனையில் வழிப்பறி; 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய காட்டுக்கொல்லை தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து கந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சிப்காட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை கத்திமுனையில் வழிமறித்த 2 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1300-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த சரண் (20), மணிகண்டன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்