மாவட்ட செய்திகள்

போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

சாலை தேய்மானம் அடைவதை அறிவதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:

நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் தேய்மானம் அடைவதை அறிவதற்காக அவ்வப்போது போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்படும். குறைந்தபட்சம் ஒருவாரம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணியை கடந்த 9-ந்தேதி தொடங்கினர். திண்டுக்கல்லில், பேட்டைமேட்டுப்பட்டி-நாகல்நகர் சாலை, பேகம்பூர் சாலை, மதுரை சாலை, வத்தலக்குண்டு சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முனீஸ்வரன், உதவி பொறியாளர் நாகநாதன் முன்னிலையில் இந்த கணக்கெடுப்பு நடந்தது.

கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சாலை ஆய்வாளர் கென்னடி ஜெயபாலன் மேற்பார்வையில் சாலைகளில் செல்லும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை