மாவட்ட செய்திகள்

வேப்பேரியில் சட்டவிரோதமாக இயங்கிய ‘ஹூக்கா பார்’; ஊழியர்கள் கைது

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள குடியிருப்பில் ‘சுனோக்கர்ஸ்‘ விளையாட்டு போர்வையில் சட்டவிரோதமாக ‘ஹூக்கா பார்‘ செயல்பட்டு வருவதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு ஹூக்கா பார் இயங்குவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகேஷ்வர் ராய் (வயது 30) உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூக்கா ஜாடிகள், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாரை நடத்தி வந்த சவுகார்ப்பேட்டையை சேர்ந்த பரோஸ் தலைமறைவாகிவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை