மாவட்ட செய்திகள்

செம்மஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

செம்மஞ்சேரி போலீசார் அடங்கிய தனிப்படையினர் புகார்கள் வந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜமேஷ் பாபு தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் புகார்கள் வந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 19), அஜித் (24) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு