தர்மபுரி,
தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி(வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் தர்மபுரி அக்ரகார தெருவில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அங்கு கட்டிட முதல் தளத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால்தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.