மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் குடிகாரர்களின் புகலிடமாக மாறிய கால்நடை மருத்துவமனை

ஸ்ரீபெரும்புதூரில் கால்நடை மருத்துவமனை குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்கில் இங்கு வரும் சமூக விரோதிகள் மது குடிப்பதோடு சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் கால்நடை மருந்தகத்தை சுற்றிலும் காலி மதுபாட்டில்களும், தண்ணீர் பாக்கெட்டுகளும் சிதறி கிடக்கின்றன.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

இரவு 10 மணிக்கு மேல் இங்கு வரும் சமூக விரோதிகள் மது குடிப்பதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவில் மின்சார விளக்குகளும் எரியாததால் அதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த கட்டிடம் ஒன்றும் உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு