மாவட்ட செய்திகள்

கடல் வளத்தை பாதுகாக்க நடுக்கடலில் செயற்கை பவள பாறைகள் அமைப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்க நடுக்கடலில் செயற்கை பவள பாறைகள் அமைக்கப்பட்டன.

ராயபுரம்,

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கவும், சிறு தொழில் மீனவ சமுதாய வாழ்வாதாரம் மேம்படவும், கடலில் மீன்வளம் அதிகரிக்கவும் செயற்கை பவள பாறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மீனவ தொழிலாளர் சங்கத்தினரும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு மீன்வள துறை, மத்திய சுற்றுசூழல் துறை, யு.என்.டி.பி., சி.இ.இ. ஆகிய துறைகளின் அனுமதி பெற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் செயற்கை பவள பாறைகளை தயார் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 140 செயற்கை பவள பாறைகளை விசைப்படகுகளில் ஏற்றி 4 நாட்டிகல் மைல் தொலைவுக்கு கொண்டு சென்று மீனவர்கள் செயற்கை பவள பாறைகளை கடலில் போட்டனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை இயக்குனர் ஆண்டோ ஆசீர்வாதம், தொண்டு நிறுவன இயக்குனர் ஆர்.டி.ஜான்சுரேஷ், மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு