மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் அகல் விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி சாவு

திருக்கழுக்குன்றத்தில் அகல் விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் புதுமேட்டுத்தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 80) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18-ந் தேதி காலை 8.30 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

. கோவில் வாசலில் நின்று அவர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த அகல் விளக்கு தீ அவரது சேலையில் பட்டது. இதில் சேலை தீப்பிடித்து எரிந்தது.

இதில் தீக்காயம் ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு