மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:

அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.ராமர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதலான ஓய்வூதிய மாற்றத்தை வழங்க வேண்டும். மருத்துவ படியை மாதம் தோறும் வழங்க வேண்டும். கொரோனா மருத்துவ செலவு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமர் உள்பட ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு