திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 2-ந்தேதி அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனி தாசில்தார் (தேர்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.