மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்புலிவனம் கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வழங்கி வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலையத்தில் மொத்தமாக நெல் வாங்குவதாக விவசாயிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு லாரியில் கொண்டு வந்த நெல் மூட்டைகளை இறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு உத்திரமேரூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளிடமும் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தவுடன் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு