மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதை கண்டித்து வேதாரண்யம் பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆனந்த், நகர தலைவர் அய்யப்பன், வக்கீல்கள் ஹரிகிருஷ்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT