மாவட்ட செய்திகள்

சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை ஏரி, குளம், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை ஏரி, குளம், கிணறுகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல் சோளிங்கர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அதில் காவேரிப்பாக்கம், நிமிலி பகுதியில் அதிகப்பட்சமாக 53 மில்லி மீட்டர் மழை பெய்தது. சோளிங்கரில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது.

பலத்த மழையால் சோளிங்கர் மற்றும் சுற்று வடடாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரக்கோணம்- 12.8, ஆற்காடு-9.1, வாலாஜா-12.2, அம்மூர்-34, கலவை-25.6.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு