மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் யார்-யாருக்கு பதவி? கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் யார்-யாருக்கு மந்திரி பதவி?, மந்திரிசபை விரிவாக்கம் எப்போது? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காலியாக இருந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 11 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். அவர்களுக்கு மந்திரிபதவி வழங்கப் படும் என்று பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT